சிலி நாட்டில் நேற்றிரவு 6.0 ரிக்டர் அளவிலான மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
சிலியின் மத்திய கடலோரப் பகுதியில் லா செரீனாவின் வடக்கே 63 கி.மீ தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டின் தேசிய நில அதிர்வு அவதான மையம் தெரிவித்துள்ளது.
இரவு 8:23 மணி முதல் சில நிமிடங்கள் நீடித்த நிலநடுக்கத்தால் வீடுகள், கடைகள் உள்ளிட்ட கட்டடங்கள் அதிர்ந்தன. இதனால் அச்சம் கொண்ட மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளுக்கு வந்தனர்.
நில நடுகத்தையடுத்து இந்த பகுதியில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டது.
இந்த நிலநடுக்கத்தால் உயிர்ச் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை. அத்துடன் சொத்துக்களுக்கும் பாரிய சேதங்கள் ஏற்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.